×

பொன்னமராவதி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து-பேராபத்து தவிர்ப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே மூலங்குடியில் தைல மர காட்டில் தீ விபத்து கிராம உதவியாளர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி தைல மரகாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த கிராம நிர்வாக உதவியாளர் செல்வம் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டார். அப்போது தைல மரங்கள் பலத்த காற்றில் உயர் மின்னழுத்த கம்பியில் மோதியதில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பற்றியது தெரியவந்தது.

தைலமரக்காடு அருகே வீடுகள் இருப்பதை உணர்ந்து உடனடியாக மின்சார வாரிய ஊழியரிடம் தகவலை தெரிவிதார். இதையடுத்து மின்சாரம் உடனை நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து தீ மேலும் பரவாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தைல மரக்காட்டில் மின்கம்பியின் அருகில் இருந்த தைல மரங்கள் வெட்டப்பட்டன. உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட கிராமநிர்வாக உதவியாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Thaila forest ,Ponnamaravathi , Ponnamaravathi: According to the information given by a village assistant, a fire broke out in the Thaila tree forest at Moolangudi near Ponnamaravathi.
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது