சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை இல்லாமல் யாரும் இறந்ததாக புகார் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு உள்ளதால் சிகிச்சையின்றி உயிரிழந்ததாக புகார் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப்பணியின்போது இறக்கும் சுகாதாரபணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க விதிகளை வகுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.