சென்னை:
பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர்
பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவிகளின் பாலியல்
குற்றச்சாட்டை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட
ஆசிரியர் ஆனந்தன் பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை
எடுத்துள்ளது.