நாகர்கோவில்: ஈரானில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடல் எல்லையை தாண்டியதாக குமரி- கேரள மீனவர்கள் 24 பேர் மார்ச் 25ம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார். இந்நிலையில் அசின்என்ற விசைப்படகில் சென்ற 10 மீனவர்களில் கேப்டன் ஜஸ்டின் லூர்தாசன் தவிர 9 பேரையும், ஈரானை சார்ந்த 2 பேரையும் கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.