×

மீஞ்சூர் அருகே ஆசிரமத்தில் தங்கிப் படித்த 5ம் வகுப்பு மாணவன் கடத்தலா?

பொன்னேரி: ஆசிரமத்தில் தங்கிப் படித்த 5ம் வகுப்பு மாணவன் மாயமானதால் அவனை யாராவது கடத்திச் சென்றுள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கற்பகாம்பாள் நகரைச் சேர்ந்தவர் குமார்.  இவரது மகன் முருகன் (11). இவன் நந்தியம்பாக்கம் மாரியம்மன் நகரில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து அப்பகுதி அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவன் ஆசிரமம் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆசிரமம் சார்பில், மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான  பள்ளி சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Minsur , 5th class student abducted while staying at an ashram near Minsur?
× RELATED வாகன சோதனையின் போது துப்பாக்கியை...