சென்னை: தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 6 சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வருகிற 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 6 சிறப்பு ரயில்களின் சேவை, ஜூன் 15ம் தேதி வரை ரத்து நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல் - மங்களுரு சென்ட்ரல் (06627, 06628), சென்னை எழும்பூர் - திருச்சி (06105, 06106), சென்னை எழும்பூர் - மன்னார்குடி (06179, 06180), பெங்களூரு - எர்ணாகுளம் (02677, 02678), திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை (06343, 06344), காரைக்கால் - எர்ணாகுளம் (06187, 06188) ஆகிய 6 சிறப்பு ரயில்கள் ஜூன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.