×

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தில் எக்ஸ்பிரஸ் பியர்ல் என்ற சரக்கு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் இந்த கப்பல் திடீரென தீ விபத்துக்குள்ளானது.  கப்பலில் இருந்து அலாரம் ஒலித்ததை அடுத்து, கடலோர காவல்படை தீயை அணைத்து 25 ஊழியர்களை மீட்டது. மீட்கப்பட்டவர்களில் 5 பேர் இந்தியர்களாவர். முன்  எச்சரிக்கை காரணமாக இவர்களுக்கு சோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் இருவர் காயம் காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Indians , Corona to the Indians rescued from the ship
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...