சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளில் தொடர்புடைய வைகோ, நல்லகண்ணு உள்பட 13 அரசியல் தலைவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.