×

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, போலீஸ் விசாரணைக்காக இன்று மீண்டும் ஆஜரானார்

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, போலீஸ் விசாரணைக்காக இன்று மீண்டும் ஆஜரானார். சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதாவிடம் விசாரணை நடைபெறுகிறது. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் விவகாரம் தொடர்பாக நேற்று கீதாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்களை விசாரித்து தனித்தனி வழக்காக பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Tags : Chennai Padma Seshadri ,Geetha , Chennai, Padma Seshadri School, Principal Geetha, Inquiry
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்