×

குமரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பிக்களுக்கு கொரோனா

சென்னை: குமரி மாவட்ட எஸ்.பியாக இருப்பவர் பத்ரி நாராயணன். இவரது அலுவலக டிரைவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எஸ்பிக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி பத்ரி நாராயணன் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் ஆவார். நாமக்கல் மாவட்ட எஸ்பி சக்திகணேசனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Kumari ,Namakal District , Corona for Kumari, Namakkal District SPs
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...