×

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மோடிதான் காரணம் என்று எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: கொரானா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எங்கு பாலியல் தொந்தரவு நடந்தாலும் பாதிப்பு உள்ளவர்களுக்கு தைரியம் கொடுத்து புகார் அளிக்க செய்ய வேண்டும். கூச்சம், அச்சம் பயமும்தான், பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கொடுக்கப்படாமல் மறைக்கப்படுவதற்கு காரணம். பாலியல் புகார்களை உதாசீனப்படுத்தாமல் அதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா போன்றவர்களின் தேவையில்லாத பேச்சுக்களை தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும்.

தற்போது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதுதான். கொரானா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான். ஆறுகோடி தடுப்பூசியை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் எடுத்த தன்னிச்சையான முடிவு தான் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று பேட்டியளித்துள்ளார்.



Tags : corona
× RELATED பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி...