×

விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பைப்லைனில் வெளியேறும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அபாய சங்கு ஒழிக்கப்பட்டு அங்கு புணிபுரிந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயின் வேகமானது அதிகரித்து வருகிறது. அங்கு பணியில் இருந்தவர்கள் அனைவருமே தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீயின் வேகம் கரும்புகை சூழ்ந்துள்ள காரணத்தால் தற்போது அந்த தீயை அணைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



Tags : Visakhapatnam , fire accident
× RELATED விசாகப்பட்டினம் துறைமுகத்தில்...