திருச்சி: அரசு உரிமம் பெறாத போலி சித்த மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி சித்த மருத்துவ அலுவலர் எச்சரித்துள்ளார். மருந்து தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலி மருந்து என சோதனையில் தெரியவந்தால சித்த மருந்து விற்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.