×

புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை காலை பதவியேற்பு!: சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்க இருக்கிறார்கள். இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு நாளை காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக  தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அரளி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதுபோன்ற காரணங்களால், முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களாகியும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், தற்காலிக சபாநாயகர், புதிய எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags : Pondicherry ,Munuswamy , Puducherry, MLAs, Inauguration, Legislative Assembly Secretary Munusamy
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...