புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் 2 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ உட்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 4 தலைவர்களை சிபிஐ கைது செய்துள்ளது. திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 தலைவர்களும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 4 பேரையும் வீட்டு காவலில் அடைக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, வீட்டுக்காவலில் அடைக்க உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது.