×

சிங்கப்பூரில் புதிய கருவி 1 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தோனிக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து சுவாச முறை மூலம்  கொரோனா சோதனை செய்வதற்கான புதிய கருவியை தயாரித்துள்ளன. இந்த கருவியின் மூலமாக சோதனை செய்தால் ஒரு நிமிடத்தில்  கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிந்துவிட முடியும்.

சிங்கப்பூருக்குள் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பொருட்டு சோதனை சாவடியில் தங்களது  தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான முயற்சியில் சுகாதார துறை அமைச்சகத்துடன் இணைந்து பிரீத்தோனிக்ஸ் நிறுவனம்  செயலாற்றி வருகின்றது. இக்கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி தந்துள்ளது.



Tags : Singapore , New instrument in Singapore Corona Result in 1 minute
× RELATED சிங்கப்பூரில் இருந்து...