புதுடெல்லி: ‘இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’இறுதிப்போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா தான் முன்னிலை வகிப்பார்’ என்று முன்னாள் வேகம் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர், ‘இறுதிப்போட்டியில் பும்ரா, ஷமியை விட இஷாந்த்தான் சிறப்பாக விளையாடுவார். அவருக்கு இங்கிலாந்து களங்களில் 3 தொடர்களில் ஆடிய அனுபவம் இருக்கிறது. கூடவே அங்கு சிறப்பாகவும் ஆடியுள்ளார். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அந்த அனுபவம் பயனளிக்கும்.
அவர்தான் இந்திய வேகத்தின் தலைவராக இருப்பார். இக்கட்டான நேரத்தில் இஷாந்த் சரியாக பந்து வீசுவார். அதே நேரத்தில் ஷமி, பும்ரா இருவரும் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸிக்கு எதிரான தொடரில் ஷமி, பும்ரா இருவரும் இல்லாமல்தான் 20 விக்கெட்களை வீழ்த்த முடிந்தது. கூடவே தொடரையும் வெல்ல முடிந்தது’ என்று கூறியுள்ளார்.