×

தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

தஞ்சை: கொரோனாவுக்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் (75). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடக்கூரில் வசித்து  வந்தார். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு சமதர்மம் என்ற மகளும், ஆசைத்தம்பி என்ற மகனும் உள்ளனர். கடந்த 22ம்  தேதி உடல் நிலை சரியில்லாமல் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துரை. பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதால் அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி துரை.பாலகிருஷ்ணன் இறந்தார். அவரது உடல் அவரது சொந்த கிராமத்தில் தகனம்  செய்யப்பட்டது. 1972 முதல் 1993 வரை ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளராகவும், 1986 முதல் 1991 வரை ஒரத்தநாடு ஒன்றிய  தலைவராகவும், 1996 முதல் 2001 வரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், 2006ம் ஆண்டு ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு  உறுப்பினராகவும் இருந்தார்.

மதிமுகவில் இணைந்து 1993 முதல் 2008 வரை தஞ்சாவூர் மாவட்ட செயலாளராகவும், தற்போது மாநில துணை  பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு  தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மு.க.ஸ்டாலின் இரங்கல்: மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மறைவுக்கு, தமிழக முதல்வரும், திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Deputy Secretary General ,Tangavur Private Hospital , Deputy General Secretary Madhimuga dies at Thanjavur private hospital
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...