×

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலிடிட்டி 31 வரை நீட்டிப்பு: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

சென்னை: , தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கை:  பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் பலர் கொரோனா தொற்றை  கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கால் வெளியே செல்ல முடியாமல் உள்ளனர்.  இதனால், பல சந்தாதாரர்களால் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாததாலும் மற்றும் சேவை முடிவடைந்ததாலும் மொபைல் சேவைகளைத்  தொடர முடியாமல் உள்ளது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அத்தகைய சந்தாதாரர்களின் வேலிடிட்டியை மே 31 வரை இலவசமாக  நீட்டித்துள்ளது. இதனால், அவர்கள் சேவையை தொடர்ந்து பெறலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் வேலிடிட்டி முடிவடைந்த அனைத்து  சந்தாதாரர்களுக்கும் இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பு சலுகை வழங்கப்படும்.   



Tags : BSNL , Validity extended to 31 due to corona curfew: BSNL announcement
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...