யாஸ் புயலுக்கான நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். யாஸ் புயலுக்கான நிவாரணத்தை முன்கூட்டியே தருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. ஆனால் ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ. 400 கோடி மட்டுமே ஒதுக்கி பாரபட்சம் காட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.