×

பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: 2011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு வரும் ஜூன் 21ம் தேதி முதல் நடைபெறும். இன்று முதல் வரும் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். உயிரும் முக்கியம், மாணவரின் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் தெரிவித்துள்ளார். ஓரிரு பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு ஒழுங்கு முறை விதிகளின்படி தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 14 முதல் நடைபெறும். இன்று முதல் ஜூன் 3ம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர், 2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். மற்ற ரெகுலேசனுக்கான தேர்வுகள் 21ம் தேதி துவங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒருசில பல்கலையில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மற்ற பல்கலைக்கழகங்களிலும் ஜூலைக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நீட் தேர்வு கூடாது என்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.



Tags : Minister Bonhair , exams
× RELATED 'கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள், கரையோர...