×

ஓசூர் அருகே பணம் கேட்டு மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை!: 5 பேர் கொண்ட கும்பம் வெறிச்செயல்..போலீசார் விசாரணை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பணம் கேட்டு மிரட்டி இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பெல்லூர் கிராமத்தை சேர்ந்த லோகேஷ். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரும் குருபரப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன்ரெட்டி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளனர். எதுபூஷன்ரெட்டி அடிக்கடி லோகேஷிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் பெல்லூர் கிராமத்தில் லோகேஷ் வீட்டு கதவை 2 பேர் தட்டினர். அப்போது தூக்க கலக்கத்தில் வெளியே வந்த லோகேஷ் நிலம் சம்பந்தமாக அவர்களுடன் பேசி கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு வந்த மேலும் மூவரில் ஒருவன் சுப்பாக்கியால் சுட்டதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த லோகேஷின் மனைவி, கணவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழுதார். 


தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் லோகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எதுபூஷன்ரெட்டி உட்பட கொலையாளிகளை பிடிக்க போலீஸ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் லோகேஷ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலையில் ஓசூரை சேர்ந்த 2 ரவுடிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பணம் கேட்டு மிரட்டி இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Tags : Hosur , Hosur, money, real estate tycoon, shot dead
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்