×

அதிமுகவிற்கு விரோதமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை: பொறுப்பாளர்களுக்கு ஓபிஎஸ், எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை.கட்சித் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது, கட்சி தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையிலும், சிலரது பெயர்களையும், படங்களையும் சிதைத்து அநாகரீகமான தகவல்களையும், உண்மைக்கு மாறான செய்திகளையும் சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுவது.

அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும், புரியாமையாலும் கட்சியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். அதிமுக அடுத்து மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயணம் குறித்தும், கட்சியின் நிலைப்பாடுகள் பற்றியும், கட்சியின் நிர்வாகத்தை விமர்சித்தும், வெகுஜன ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ, கட்சிப் பொறுப்பாளர்களோ, கட்சியில் உள்ளவர்களோ யாரும் எத்தகைய கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடக்கூடாது. கட்சித் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.


Tags : Edipati , Action against those who act against the AIADMK: OPS, Edappadi warning to those responsible
× RELATED வேதா இல்லம் எங்களுக்கு கோவில்!:...