×

தஞ்சை, மயிலாடுதுறையில் சோகம்: முதியோர்களின் காதலால் இணை பிரியாத மரணங்கள்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூர் குளத்துமேட்டுத் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (83). சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட இவர், தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனையில் சம்சுதீனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி சம்சுதீன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலறிந்த அவரது மனைவி ஆயிஷாகனி (70) நேற்று முன்தினம் அதிகாலை இறந்துவிட்டார்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அக்ரகார தெருவை சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மன் (88). ஓய்வு ெபற்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர்.

இவரது மனைவி சீதா(80). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாதமாக தம்பதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று சீதா இறந்தார். இது, லட்சுமி நரசிம்மனுக்கு தெரிய வர அதிர்ச்சியில் அவரும் நாற்காலியில் அமர்ந்தபடியே இறந்தார்.

மனைவிக்காக உயிரை விட்ட கணவன்
ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் தெற்கு குமரன் நகரைச் சேர்ந்த நெசவுதொழிலாளிகள் தங்கராசு (70). இவரது மனைவி முத்துலட்சுமி(65). முத்துலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலையில் இறந்தார். இந்நிலையில், முத்துலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும்போது, என் மனைவியை பிரிந்து என்னால் இருக்க முடியாது என கூறிக்கொண்டே தன் உயிரை விட்டார். இதையடுத்து, தங்கராசு மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவர் உடலையும் ஒன்றாக கொண்டு சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

Tags : Thanjai , Tragedy in Tanjore, Mayiladuthurai: Inseparable deaths due to love of the elderly
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...