சென்னை: The Family Man-2 இந்தி தொடர் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்களை அவதூறாக சித்தரிக்கும் தொடரை தடை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.