×

புதுச்சேரியில் மே 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை தொடரும். நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.விரிவான அரசாணை வெளியிடப்படும் என ஆளுநர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும். 


பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதிக தூரம் சென்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில், கடந்த 10-ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : New Jersey ,Governor ,T.P. Sauntarajan , In Pondicherry, curfew, extension on May 31st
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!