×

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்னையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம்.  7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்த தவறை சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.

எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Cabinet reshuffle on release of 7: Thirumavalavan
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...