×

எமதர்மன், சித்ரகுப்தன் போல் வேடமணிந்து சீர்காழியில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

சீர்காழி : சீர்காழி காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் சித்ரகுப்தன் கொரோனா வேடமணிந்து வந்து முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் கொரோனா பிடித்து சென்று விடும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sirkazhi ,Etherman ,Chitragupta , Sirkazhi: Etherman on behalf of the Sirkazhi Police to create corona awareness for the public in the new bus stand area.
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்