சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, குமரி உள்ளிட்ட ஆட்சியர்கள் பங்கேற்று உள்ளனர்.