பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் 45 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 31 கனஅடி வீதம் மொத்தம் 99.00 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குதிரையாறு அணை திறப்பின்மூலம் திண்டுக்கல், திருப்பூரில் 4.641 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.