×

அக்டோபர்-நவம்பரில் டி20 உலகக்கோப்பை தொடர்?.. 29ம் தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு ஆலோசனை

பிசிசிஐ: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய 9 இடங்களில் போட்டியை நடத்த பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் திட்டமிட்டப்படி  தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாவிடில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக கோப்பை டி20 தொடரை நடத்துவது தொடர்பாக ஐசிசி ஆலோசனை கூட்டம் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக உலகக் கோப்பையைப் பற்றி விவாதிக்க மே 29ம் தேதி சிறப்பு பொதுக் கூட்டத்தை பிசிசிஐ கூட்டி உள்ளது. இதில் கொரோனா பரவலுக்கு மத்தியில், தொடரை நடத்துவது, அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Tags : T20 World Cup Series ,BCCI , T20 World Cup Series in October-November? .. BCCI Special General Committee Consultation on 29th
× RELATED அணியின் நலனுக்காக புதிய...