×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் நாளை முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை: சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 


ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகளை பிரதிநிதிகளிடமும் முதல்வர் வழங்கினார்.



Tags : Chief Minister ,Salem ,Erode ,Gowai , Corona, Salem, Erode, Coimbatore, Chief, Study
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...