×

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி எம்பி, எம்எல்ஏக்களின் 1 மாத ஊதியம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியும், அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி அளிக்கப்படும்.மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரண பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இந்த பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அதிமுக சார்பில் தமிழக அரசிடம் 1 கோடி வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் அதிமுகவின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும்.`கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே’ என்ற எம்ஜிஆரின் கொள்கை வழி நின்று அதிமுக தொண்டர்கள் நிவாரண பணிகளில் அக்கறை கொள்ளுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Principal Relief ,Corona ,Prevention and Relief Functions , AIADMK 1 crore MP, 1 month salary of MLAs for Chief Minister's relief fund for corona disease prevention and relief work: OBS, EPS joint announcement
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...