×

யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி!: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..!!

லக்னோ: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 1621 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கக்கூடிய அதிர்ச்சி தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15, 19, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை உத்திரப்பிரதேச அரசு ஈடுபடுத்தி இருந்தது. 


இந்நிலையில் உத்திரப்பிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் யூனியன் தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  அதாவது, தேர்தல் பணியில் ஈடுபட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களில் 1621 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 



Tags : Yogi Adityanath Crisis ,RB ,Panchayatu elections ,Corona , UP, Panchayat Election, Corona, Kills
× RELATED யானைப்பசிக்கு சோளப்பொரியா?...