சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே அறிக்கை: கொரோனாகாலத்தில் புதுதிட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும் காரணமாகும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலை உயர்த்துவது தவறு. இந்த விஷயத்தில் அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறது. இந்த சூழலில் நாடு கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து விடுபடும் வரை எரிபொருள் விலை உயர்வுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post எரிபொருள் விலையை உயர்த்தக் கூடாது: மத்திய அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.