சென்னை: தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் நேற்று மட்டும் 21,317 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று ஒரேநாளில் 311 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 17,670 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,59,706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 33,181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 6,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21,317 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,61,635 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 311 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 17,670 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.