மேற்கு வங்கத்தில் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கை அம்மாநில முதல்வர் மம்தா நேற்று அறிவித்துள்ளார். பெட்ரோல் பங்க், மருந்து கடைகள், பால், குடிநீர், மின்சாரம், சட்டம் ஒழுங்கு போன்ற சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அனைத்து அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மம்தாவின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.