சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரு நாட்களில் சரி செய்யப்படும் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து 4 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் மூலமாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஸ்டெர்லைட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பனி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.