×

ஊராட்சி நிதி முறைகேடு கலெக்டர் விசாரிக்க உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், டி.வேலாங்குடி அருகே ஆண்டியேந்தலைச் ேசர்ந்த உதயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தங்கள் ஊராட்சியில் 2016 முதல் 2019 வரை நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு செய்திருந்தார். மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்து, இது  குறித்து விருதுநகர் கலெக்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரித்து, 4 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Panchayat Financial Abuse Collector , Order to investigate Panchayat Financial Abuse Collector
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...