×

ஜீவன்ஜோதி ஆட்சிப்பணி பயிற்சி நிலைய இயக்குநர் பாதிரியார் ஜான் சுரேஷ் கொரோனாவுக்கு பலி: நாடு முழுவதும் ஒரு மாதத்தில் 100 பாதிரியார்கள் உயிரிழப்பு

சென்னை:செங்கப்பட்டு கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக சேவை செய்து வந்தவர் பி.ஜான் சுரேஷ் (50). செங்கல்பட்டு மறை மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்தார். லயேலா கல்லூரியலி படித்தார் மாணவர்களிடம் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்கள் மூலம் நன்மதிப்பை பெற்றவர். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்ட இவர் சமூக நீதியை வலியுறுத்தும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். பஞ்சமி நில மீட்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் நேற்று மறைமாவட்ட பேராலயத்தில் இறப்பு திருப்பலிக்குப்பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 தேதி முதல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 100 பாதிரியார்கள் பலியாகியுள்ளனர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Jeevanjothi ,Administrative Training Center ,Pastor ,John Suresh Korona , Jeevanjothi Administrative Training Center Director Pastor John Suresh Korona Killed: 100 Priests Killed Across the Nation Nation
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!