×

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம்

சென்னை: தமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நேற்று (12ம் தேதி) மாலை சென்னையிலும், இதர மாவட்டங்களில் எங்கும் ஷவ்வால் மாத பிறை தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (நாளை) முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுவதாகவும், அன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி சலாஹுத்தீன் அய்யூப் தெரிவித்துள்ளார்.


Tags : Ramadan ,Tamil Nadu , Ramadan celebration in Tamil Nadu tomorrow
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து