சென்னை: அனுமதியில்லா கட்டடங்களுக்கு எதிராக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை நெற்குன்றத்தில் சி.எம்.டி.ஏ. விதிகளை மீறி கட்டிடம் கட்ட தடை கோரி ஸ்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்டுமானத்துக்கு தடை விதித்த அதிகாரி மாற்றம், பொறியாளர் இறந்துவிட்டதாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.