×

கேரளாவில் மேலும் 1000 கைதிகளுக்கு பரோல்

திருவனந்தபுரம் : கேரளாவில் அனைத்து சிறைகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேலான ஆண்கள், 50 வயதுக்கு மேலான பெண்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள், ஒரு வழக்கில் மட்டும் தொடர்புடையவர்கள், 7 வருடத்திற்கு குறைவாக தண்டனை  பெற்றவர்கள், விசாரணை கைதிகள் ஆகியோருக்கு 3 மாதம் பரோல் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கடந்த சில தினங்களாக 568 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. தற்போது மேலும் 1000 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட உள்ளது. தேசவிரோத வழக்கு உள்பட கடுமையான பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு பரோல் வழங்கப்பட வில்லை.



Tags : Kerala , Parole for another 1000 prisoners in Kerala
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு