சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வானதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம் தங்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.பி.முனசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றார்.
இதனையடுத்து தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெருன்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து நாளை கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயர் பிச்சாண்டி அனைத்து எம்.எல.ஏ.க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஏதாவது ஒரு பதவியில் மட்டும் நீடிக்க முடியும் என்பதால் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.