×

சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிப்போர் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் யாரும் வெளியே வர கூடாது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிக்கு செல்லுபவர்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்களபணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் செல்ல சென்னையில் 200 மாநகரப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி வரை மளிகை, இறைச்ச கடைகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : 200 Municipal Buses ,Chennai ,TN Government , Chennai, Emergency, 200 city buses, Government of Tamil Nadu
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...