×

‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!!

டெல்லி: இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சீரம் இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமாகியுள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே தடுப்பூசி மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முன்னுரிமை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. 
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் கொண்டதன் அடிப்படையில், சில நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கருதக்கூடாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையானது ஓரிரு மாதங்களில் முடியும் செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

The post ‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Serum India ,Officer ,Delhi ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...