×

பேரவை தலைவர் தேர்தல் மே 11ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 11ம் தேதி மதியம் 12 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 7(1)ன் கீழ் 2021ம் ஆண்டு மே 12ம் தேதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 7(1)ன் கீழ் 2021ம்  ஆண்டு மே 11ம் தேதி மதியம் 12 மணி வரையில் பேரவைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புத்தாள்கள் சட்டமன்ற பேரவைச்செயலாளரால் பெற்றுக்கொள்ளப்பெறும். வேட்புத்தாள்களை செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.



Tags : Assembly President election , Nominations will be accepted until May 11 for the Assembly President election
× RELATED பேரவை தலைவர் தேர்தல் மே 11ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்