×

ஐந்து மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளால் அதிருப்தி எம்பிகளுக்கு சோனியா ‘டோஸ்’

புதுடெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ள சோனியா காந்திகூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ெபரும் பின்னடைவைச் சந்தித்தது. புதுச்சேரியில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் அந்தக்கட்சி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 18 சட்டசபை தொகுதி, ஒரு மக்களவை தொகுதியில் (நாகர்கோவில்) வெற்றி பெற்றது.
தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் காங்கிரசின் செயல்பாடுகள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்து.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், ‘‘‘‘நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் துரதிர்ஷ்டவசமாக, நமது கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் செயற்குழு விரைவில் கூடுகிறது. இந்தப் பின்னடைவில் இருந்து ஒரு கட்சியாக, நமது எம்பிக்கள் பணிவு மற்றும் நேர்மையுடன் உரிய படிப்பினைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தமிழகத்தில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளாவில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்தார்.


Tags : Sonia , Sonia gives 'dose' to disgruntled MPs over five state assembly election results
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...