மதுரை: தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் செயல்படாமல் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை உள்ளது என்று உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. செயல்படாமல் உள்ளவற்றில் எத்தனை மையங்களை உடனே திறந்து ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது