×

அசாமில் ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

அசாம்: அசாமில் இன்று காலை திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. அசாமின் தேஜ்பூர் நகரமருகே இன்று காலை 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.  இந்த லேசான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த போதும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  கடந்த 3-ம் தேதியும் அசாம் மாநிலம் சோனித்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, கடந்த 28-ம் தேதியும் இதே சோனித்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Assam , In Assam, earthquake, 3.6 on the Richter, recorded
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...